மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்:
1.       புளித்த மோர் – 500 மி.லி
2.       வெண்டைக்காய் – 10 எண்ணம்
3.       கடலைப்பருப்பு - 25 கிராம்
4.       வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5.       மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
6.       மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7.       அரிசி – 1 தேக்கரண்டி
8.       தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
9.       கடுகு – 1/2 தேக்கரண்டி
10.   வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
11.   எண்ணெய்தேவையான அளவு
12.   உப்புதேவையான அளவு.

செய்முறை:
·         கடலைப்பருப்பு, மல்லி, மிளகாய் வற்றல், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுக்கவும்.
·         வறுத்தவைகளுடன் தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
·         அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
·         வெண்டைக்காய்களைத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
·         வதக்கியவற்றைக் கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும்.
·         இதை மிதமான தீயில் சுட வைத்து இலேசாக கொதித்ததும் இறக்கவும்.
·         வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததுதும், அதில் கடுகு, வெந்தயம் தாளித்துச் சேர்க்கவும்.

Labels: